
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியர் பகுதியில் நேற்று காலை சிறுவன் ஒருவன் பட்ட பகலில் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்தப் பகுதியில் ராகுல் குப்தா என்ற தொழிலதிபர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஏழு வயதில் ஷிவாய் குப்தா என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில்சிறுவனை அவருடைய தாயார் நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் அந்த தாயின் கண்ணில் மிளகாய் பொடியை தூவி சிறுவனை கடத்தி சென்று விட்டனர். அந்த தாய் சுதாகரிப்பதற்குள் சிறுவனை கடத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இந்த காட்சிகள் அங்கிருந்த ஒரு சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. உடனடியாக வீட்டிற்கு சென்ற அந்த பெண்மணி தன் கணவனிடம் நடந்த விவரங்களை கூற அவர்கள் இருவரும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து சிறுவனை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்ட நிலையில் ஆளும் பாஜக அரசை எதிர்க்கட்சிகள் சரமாரியாக விமர்சித்தது. அந்த சிறுவன் கடத்தப்பட்ட 6 மணி நேரத்திற்குள் அவனை பத்திரமாக மீட்டதாக அந்த மாநிலத்தின் முதல்வர் தெரிவித்துள்ளார்.மேலும் அந்த கடத்தல் காரர்களின் விவரங்களை தெரிவிக்காத நிலையில் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று மட்டும் கூறியுள்ளார்.
मां की आंखों में मिर्ची झोंक हाथों से छीन ले गए कलेजे का टुकड़ा… MP के ग्वालियर में शक्कर कारोबारी के बेटे का अपहरण।
इन लोगो को जल्दी गिरफ्तार कर के कड़ी से कड़ी सजा मिलना चाहिए।@DrMohanYadav51 @dmgwalior pic.twitter.com/qJAQzYuHMm— मनीष सागर (@Manish_NSTA) February 13, 2025