ஐபிஎல் தொடரில் 13வது ஆட்டம் லக்னோவில் நடைபெற்றது. லக்னோ மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. பஞ்சாப் அணியானது முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 171 ரன்கள் எடுத்தது. கடைசியில் 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய பஞ்சாப் அணி 16.2ஓவர்களில் 177 ரன்கள் எடுத்தது. இதனால் பஞ்சாப் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் பிரியன்ஸ் ஆர்யா எட்டு ரன்கள் அடித்திருந்தபோது திக்வேஷ் ரதி பந்துவீச்சில் ஆட்டம்  இழந்தார். இந்த விக்கெட்டை கொண்டாடும் விதமாக பிரியன்ஸ் ஆர்யா பக்கத்தில் சென்று தன்னுடைய கைகளில் எழுதுவது போன்று “நோட்புக்” கொண்டாட்டத்தில்  திக்வேஷ் ரதி ஈடுபட்டுள்ளார்.