சென்னை ஆவடியில் எலெக்ட்ரிக் பைக் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஆவடியில் சாலையில் சென்று கொண்டிருந்த எலெக்ட்ரிக் பைக்கில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது பைக்கின் பின்புறத்தில் இருந்து புகை எழும்பியது. உடனே சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர் பைக்கில் இருந்து இறங்கியதால் அசம்பாவித சம்பவங்கள் தவிர்க்கப்பட்டது.

இதுகுறித்து தீயணைப்புதுறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புதுறையினர் தங்களது பணியில் ஈடுபட்டனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.