சென்னை கோவிலம்பாக்கத்தில் உள்ள ஒரு பிரபலமான ஜூஸ் கடையில் எலி பழங்களை ருசித்து சாப்பிடும் வீடியோ வெளியாகி சமூக ஊடகங்களில் பரவியதால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதார விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்ற கேள்வி இந்தக் காணொளியால் எழுந்துள்ளது.

இந்த வீடியோவில், வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் இடத்தில் கண்ணுக்குத் தெளிவாக பழங்கள்  வைக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு எலி அந்த பழங்களை சுவைத்துக் கொண்டிருக்கிறது. இதைக் கவனித்த ஒருவர், கடை ஊழியர்களிடம் இது குறித்து கேள்வி எழுப்பியதோடு, சுகாதார பராமரிப்பு குறைவாக இருப்பதைக் குற்றம்சாட்டியுள்ளார்.

வாடிக்கையாளரின் கேள்விக்கு பதிலளிக்க கடை உரிமையாளர் எந்த வருத்தமும் காட்டாமல் அலட்சியமாக, “யாரிடமாவது வேண்டுமானாலும் புகார் பண்ணுங்க!” என திமிராக பதிலளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதில் பலரை கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது. சம்பவம் வெளியாகியதைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் வாடிக்கையாளர்கள் கடையை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

“>