சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்குளத்தில் இருக்கும் கிண்ணத்தில் 13 வயது சிறுமியின் உடல் மிதந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சிறுமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதாவது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வாலங்கோட்டை பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவர் தனது சித்தியை கொலை செய்தது, ஒன்பது வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது என பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சதீஷின் மனைவி பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயும் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சதீஷ் உதவி செய்வது போல நடித்து சிறுமியுடன் நெருக்கமாக பழகியுள்ளார். கடந்த 24 ஆம் தேதி சிறுமியை தனது சொந்த கிராமமான கல்குளத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பிறகு சிறுமியை கிணற்றில் தள்ளி கல்லை போட்டு கொலை செய்துவிட்டார். போலீசார் அவரை பிடிக்க முயன்ற போது தப்பி ஓடியுள்ளார். இதனால் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு காலில் கட்டு போடப்பட்டது. போலீசார் சதீதை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.