சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து கலக்கி கொண்டிருப்பவர் தான் வாணி போஜன். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் என்ற சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானார். ஓ மை கடவுளே என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.  சிறந்த நடிப்பு மூலமாக தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்து வைத்துள்ளார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய அவர் தன்னை பற்றி வரும் மோசமான  கமெண்டுகள் குறித்து பேசியுள்ளார்.

அதில் சில நேரம் என்னை குறித்து வரும் தவறான செய்திகளை பார்க்கும்போது ஆத்திரமாக தான் இருக்கும். நடந்தவற்றை நம்முடன் இருந்து பார்த்தது போன்று எழுதுவார்கள். அதை பார்க்கும்போது கஷ்டமாக இருக்கும். ஆனால் தற்போது அவை அனைத்தையும் கடந்து வந்து விட்டேன். இப்போதெலாம் எழுது உன் இஷ்டம் போல எழுது நான் மகிழ்ச்சியாக உள்ளேன்” என்று கூறியுள்ளார்.