உத்தரப்பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா பகுதியில், சமூக ஊடகப் பழக்கமே குடும்பத்தில் தகராறுக்கு காரணமாக மாறியுள்ளது. அதாவது பில்குவா பகுதியைச் சேர்ந்த ஒரு பெண், தன்னுடைய கணவரால் இன்ஸ்டாகிராமில் இரண்டு பின்தொடர்பவர்களை இழந்ததாக கூறி, ஹபூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து, போலீசார் கணவன்–மனைவி இருவரையும் அழைத்து, நான்கு மணி நேரத்திற்கு மேலாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

இது பற்றி கணவன் கூறும்போது என் மனைவி 24 மணி நேரமும் செல்போனில் நேரத்தை செலவழிப்பதோடு ரீல்ஸ் வீடியோக்களை பார்க்கிறார். அதோடு தினசரி அவர் 2 வீடியோக்களை உருவாக்கி சோஷியல் மீடியாவில் பதிவிடுகிறார். இதனால் எனக்கும் என் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுகிறது என கூறினார். ஆனால் மனைவி தன் கணவர் தன்னை பாத்திரம் கழுவ சொன்னதால் அந்த நேரத்தில் instagram ஐ பார்க்க முடியாமல் இரண்டு பேர் தன்னை பின்தொடர்பவர்களை குறைத்து விட்டார்கள் என்றார்.

இதன் காரணமாக தான் மிகவும் மன வேதனைக்கு ஆளானதாகவும் கணவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார். இவர்கள் இருவரிடமும் போலீசார் கிட்டத்தட்ட 4 மணி நேரம் விளக்கம் கேட்ட நிலையில் பின்னர் கணவன் தன் செயலுக்காக மன்னிப்பு கேட்டார். அதன்பிறகே மனைவி சமாதானமாகி வீட்டிற்கு சென்றார். மேலும் இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.