
நம்மூர் மக்கள் சிக்கனத்தில் எதையும் சமாளிக்க கூடிய திறமைகள் கொண்டவர்கள். அதற்கு எடுத்துக்காட்டு போல தற்போது ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதில், ஒரு நபர் கடுகு எண்ணெய் கேனிஸ்டரைக் வெட்டி அதில் ஒரு விசிறியை பொருத்தி, மறுபுறம் சாக்கைப் பையைப் பதித்து ஒரு கூலரை உருவாக்கியிருக்கிறார்.
இதை பார்த்த அனைவரும் “இவங்க யாரு பாஸ்! பொறியாளர்களையும் மீறிவிட்டாங்க” என்று நக்கலாகக் கூறி வருகின்றனர். இது கோடை காலம் என்பதால் ஏசி வாங்க முடியாதவர்கள் கூலரை நாடுகிறார்கள். ஆனால் அதற்கும் வாய்ப்பில்லாத நிலையில், தனது வீட்டிற்கேற்ப பழைய பொருட்களைக் கொண்டு கூலர் உருவாக்கியிருக்கிறார் அந்த நபர்.
View this post on Instagram
விசிறி, சாக்கு, மற்றும் சில கம்பிகளை மட்டும் கொண்டு உருவாக்கப்பட்ட அந்த கூலர் வேலை செய்து கொண்டிருப்பது வீடியோவில் தெளிவாக தெரிகிறது. இது Instagram மற்றும் பல சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். “சின்ன விஷயத்துக்கு கூட பொறியாளரிடம் போவோமா?” என்று ஒருவர் நகைச்சுவையாக கூறியிருக்க, “இது போலி பொறியியல் புரட்சி” என மற்றொருவர் கமெண்ட் செய்துள்ளார்.
பாதுகாப்பு அம்சங்கள் குறைவாக இருப்பதால், இது போன்ற முயற்சிகள் வரவேற்கத்தக்கது என்றாலும், அவற்றைப் பின்பற்றும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.