இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. அதிலும் பாம்புகள் குறித்த வீடியோ என்றால் சொல்லவே வேண்டாம் மிகவும் பரபரப்பாகவும் பார்ப்பதற்கு திகலூட்டும் விதமாகவும் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஒரு பெண்மணி ஒரு பெட்டிக்குள் இருந்து ஒரு பெரிய பாம்பினை எடுத்து அதனை அலமாரி போன்ற ஒரு கண்ணாடி கூண்டுக்குள் வைக்கிறார்.

அந்த பாம்பு முதலில் அமைதியாக சென்றாலும் கூண்டினை அந்தப் பெண்மணி மூடும்போது அதன் வால் சிக்கி கொண்டது. இதனால் அந்தப் பெண் வாலை எடுத்து உள்ளே வைக்கும் போது திடீரென பாம்பு அந்தப் பெண்ணின் கையில் கடித்துவிட்டது. அது சீறிப்பாய்ந்த நிலையில் அந்தப் பெண் எப்படியோ அதனைப் பிடித்து கூண்டுக்குள் அடைத்தார். மேலும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.