உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஜவுன்பூர் மாவட்டத்தில், மது அருந்திய நிலையில் சில பெண்கள் நடுரோட்டில் பரபரப்பு ஏற்படுத்திய சம்பவம், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சுமார் 1 நிமிடம் 45 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், குறித்த பெண்கள் சாலையின் நடுவே சத்தமிட்டு கத்தி, பொதுமக்கள் மற்றும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை காணலாம்.

வழிச்சாலையில் நடந்த இந்த சம்பவத்தில், பெண்கள் முதலில் வழியே சென்ற பொதுமக்களுடன் வாக்குவாதம் செய்தனர். பின்னர் தகவல் பெற்ற போலீசார் சம்பவ இடத்திற்கு வந்ததும், அவர்களுடனும் கடுமையான முறையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் மற்றும் போலீசார் அவர்களை அமைதிப்படுத்த முயன்றபோதும், அந்த பெண்கள் அதிகமாகவே சத்தமிட்டு கொந்தளித்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் தீவிரமாக பரவி வருகிறது.

பொதுமக்கள் நடுவே இவ்வாறு பெண்கள் அதிருப்திகரமான வகையில் நடந்து கொண்டது குறித்து பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பெண்கள் குடிபோதையில் நடந்து கொண்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

போலீசார், சம்பவ இடத்தில் இருந்த பெண்களை அமைதியாகக் கையாள முயற்சி செய்ததாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.