புதுதில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் டெர்மினல் 3-ல், பயணிகளை மத்தியில் ஒரு பெண் பயணி தனது கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் சண்டை போட்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாக  பரவி வருகிறது.

சம்பவம் ஒரு தொழில்நுட்ப கோளாறால் லக்கேஜ் வருவதில் ஏற்பட்ட தாமதத்தால் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வீடியோவில், அந்த பெண் விமான நிலைய ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பின்னர் ஒரு தடுப்பு சுவரை கீழே தள்ளி, அதனை தரையில் விழச் செய்தது பதிவாகியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by AVIATION NEWS (@aviationnews___)

பெண் பயணி விமான நிறுவன ஊழியர்களிடமும், மத்திய தொழிற் பாதுகாப்புப் படை (CISF) அதிகாரியிடமும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதிகாரிகள் பலமுறை தொழில்நுட்ப கோளாறு காரணமாக லக்கேஜ்  வர தாமதம் ஆவதாக விளக்கியும், அந்தப் பெண் அமைதியாக இருக்க மறுத்துவிட்டதாக தெரிவித்தனர்.

அதிகாரிகள் பரபரப்பை தணிக்க முயன்றபோதும், பயணியின் கோபம் தணியவில்லை. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானதும், நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் தெரிவித்துள்ளனர்.

“பொறுமை மிக முக்கியம்; விமான நிலையம் என்பது தனி சொத்து அல்ல” என ஒருவர் குறிப்பிட்டுள்ளார். “ஒரு லக்கேஜ்காக இவ்வளவு கோபம் தேவையா?” என மற்றொருவர் எழுதியுள்ளார். விமான நிலைய நிர்வாகம், “தாமதம் ஏற்பட்ட லக்கேஜ் அனைத்து பயணிகளுக்கும் விரைவில் வழங்கப்படும்” என உறுதிபட தெரிவித்தது குறிப்பிடத்தக்கதாகும்.