
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஸ்ரீ லீலா. இவர் தமிழ் சினிமாவில் பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார். தற்போது இளைஞர்களின் லேட்டஸ்ட் கனவு கன்னியாக வலம் வரும் நடிகை ஸ்ரீலீலா நடனம் ஆடுவதில் வல்லவர்.
இந்நிலையில் நடிகை ஸ்ரீலீலா திருமணத்திற்கு முன்பாகவே 3 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வரும் நிலையில் தற்போது திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவருக்கு குடும்பத்தினர் நலங்கு வைக்கிறார்கள்.
சிலர் அவரது முகத்தில் மஞ்சள் தடவுவது தெளிவாக தெரிகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்ட நடிகை ஸ்ரீலீலா இது எனக்கு மிகவும் முக்கியமான நாள் என்று பதிவிட்டுள்ளார்.
இதன் காரணமாக நடிகை ஸ்ரீலீலாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். மேலும் நடிகை ஸ்ரீலீலாவுக்கு திடீரென திருமண நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக பரவும் செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது