சென்னை மாவட்டம் அருகம்பாக்கம் பகுதியில் ஒரு 35 வயது இளம் பெண் வசித்து வருகிறார். அவருக்கு திருமணமான நிலையில் சூளைமேடு பகுதியில் தன் கணவருடன் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அதே வீட்டின் மாடியில் தமிழ்ச்செல்வன் என்ற 30 வயது வாலிபர் வசித்து வருகிறார்.

இதில் தமிழ்ச்செல்வன் மற்றும் அந்த பெண் இருவரும் பழக ஆரம்பித்த நிலையில் அந்த பெண் நட்பாக பழகிய நிலையில் தமிழ்செல்வனுக்கு அவர் மீது காதல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தமிழ்ச்செல்வன் அந்தப் பெண்ணிடம் உன் கணவரை விட்டுவிட்டு என்னுடன் வந்துவிடு நாம் இருவரும் சேர்ந்து வாழலாம் என்று கூறியுள்ளார்.

அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த இளம் பெண் பெற்றோர் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்துகொள். எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்று கூறியுள்ளார். அதன் பிறகு அவருடன் பேசுவதை அந்த இளம் பெண் தவிர்த்த நிலையில் வீட்டிற்கு சென்ற தமிழ்ச்செல்வன் அந்த பெண்ணுடன் தகராறு செய்து அவரை அடித்துள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் போலீசார் தமிழ்செல்வனை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது திருமணமான அந்த இளம் பெண்ணை அவர் காதலித்தது தெரிய வந்த நிலையில், போலீஸார் இப்படி செய்யக்கூடாது என அறிவுரை வழங்கியுள்ளனர். இருப்பினும் அந்த வாலிபர் விடாப்படியாக அந்த பெண்ணிற்கு திருமணமானாலும் பரவாயில்லை. எனக்கு அவரை திருமணம் செய்து வையுங்கள் என கூறியுள்ளார்.

அந்த பெண்ணுக்கு திருமணமானாலும் பரவாயில்லை அவரை என்னால் மறக்க முடியவில்லை எனக்கூறி தமிழ்ச்செல்வன் தகராறு செய்ததால் அவரை அந்தப் பெண்ணை தாக்கிய குற்றத்திற்காக போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.