
நடிகர் ராதிகா கிழக்கே போகும் ரயில் என்ற படத்தில் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் . சினிமாவிலிருந்து வந்து பின்னர் சின்னத்திரையில் ஒரு கலக்கு கலக்கினார். இப்போது அரசியலில் ஈடுபட்டு வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் மலையாளம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். நடிப்பில் மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் கலக்கி வருகிறார். இவர் சரத்குமாரை இரண்டாவதாக தான் திருமணம் செய்து கொண்டுள்ளார் . ராதிகாவிற்கு ரயான் என்ற மகளும் ராகுல் என்கிற மகனும் இருக்கிறார்கள். இவர் சரத்குமாரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டாலும் சரத்குமாரின் முதல் மனைவியோடும், வரலட்சுமியோடும் ராதிகாவுக்கு நல்லவிதமான உறவு இருந்து வருகிறது.
இந்த நிலையில் பேட்டி ஒன்றில் ராதிகாவின் மகள் ரயான் தன்னுடைய குடும்பம் குறித்து பேசி உள்ளார். அதில்,” வரலட்சுமி திருமணத்தில் என்னுடைய அம்மா ராதிகா மிகவும் ஈடுபாடாக இருந்ததை கண்டு பலரும் அவருக்கு பெரிய மனசு என்று கூறினார்கள். அது என்னுடைய அம்மாவின் இயல்பு. நானும் வரலட்சுமியும் ரொம்பவே க்ளோசாக தான் இருப்போம். அவர் திருமணத்திற்கு பிறகு பலமுறை கணவரோடு என் வீட்டிற்கு வந்துள்ளார். என்னுடைய குடும்பம் குறித்து யாராவது தவறாக பேசினால் நானும் அம்மாவும் அவர்களை சும்மா விடமாட்டோம்” என்று கூறியுள்ளார்.