காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உப்பேரிகுளம் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரோஜா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்த சிறுமி அருகில் இருக்கும் அங்கன்வாடி மையத்திற்கு சென்ற ஆரம்ப கல்வி பயின்று வந்துள்ளார். இரண்டு நாட்களாக சளி, இருமல் என சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை அங்கன்வாடி மையத்திற்கு சென்ற சிறுமி அங்கு வழங்கப்பட்ட உணவை மதியம் சாப்பிட்டு உள்ளார். அதன் பிறகு வீட்டிற்கு வந்த சிறுமிக்கு வாந்தி வயிற்றுப்போக்கு போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டதால் அருகில் இருக்கும் நகர் நல மையத்திற்கு அவரது தாய் அழைத்துச் சென்றார்.

அங்கு மருத்துவமனை ஊழியர்கள் கொடுத்த மருந்து, மாத்திரைகளை ரோஜா சிறுமிக்கு கொடுத்துள்ளார். ஆனாலும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை. வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு சிறுமி திடீரென மயக்க நிலைக்கு சென்று விட்டார். அவரை பெற்றோர் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் பெற்றோர் மருத்துவமனையிலேயே கதறி அழுதனர். இது குறித்து அறிந்த குழந்தை வளர்ச்சி திட்ட அதிகாரிகள் அங்கன்வாடி மையத்தில் ஆய்வு நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.