பெங்களூருவில் ரயில் நிலையத்திற்கு அருகே, பீகாருக்கு செல்ல திட்டமிட்டு வந்த 19 வயது இளம்பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் ஏப்ரல் 1 ஆம் தேதி இரவு 1.20 மணியளவில் நடைபெற்றது. கேரளாவின் விவசாய பண்ணையில் வேலை பார்த்து வந்த அந்த பெண், பீகாருக்கு திரும்புவதற்காக மங்களூரில் இருந்து பெங்களூரு வந்திருந்தார்.

பின்னர் தனது மூத்த சகோதரரை செல்போன் மூலம் அழைத்தார். இருவரும் பெங்களூரு ரயில் நிலையத்தில் இரவு 1.13 மணியளவில் சந்தித்து அருகிலுள்ள இடத்தில் உணவு வாங்கச் சென்றுள்ளனர்.

அந்த நேரத்தில் இருவர் இடைமறித்து, அவரது சகோதரரை தாக்கி, பெண்ணை இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் அலறி சத்தமிட்டதையடுத்து அருகே சென்ற பாதசாரிகள் அந்த இடத்திற்கு விரைந்து சென்று, குற்றவாளிகளை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.