இலங்கையில் தமிழீழ போர் நடந்த போது அப்போது அதிபராக இருந்த மகேந்தா ராஜபக்சே விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார். விடுதலை புலிகள் அழிக்கப்பட்டன என அறிக்கை வெளியிட்டார். இதை தொடர்ந்து அடிக்கடி பிரபாகரன் உயிரோடு இருப்பதாகவும், அவர் மீண்டும் வருவார் என்றும் சமூக வலைத்தளங்களில் செய்தியால் பரவுவது வழக்கம்.
இந்த நிலையில் இன்று பழ. நெடுமாறன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் தான் இருக்கிறார். அவர் மீண்டும் வருவதற்கான காலமானது கைகூடி இருக்கிறது. அவருடைய ஒப்புதலோடு இந்த தகவலை நான் தெரிவிக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.