
கேரள மாநிலம் எர்ணாகுளம் வடக்கன்பரவூர் பகுதியில் சுதாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அம்பாடி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் மாணவனின் தாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். சம்பவம் நடைபெற்ற அன்று மாணவனின் தாயும், தந்தையும் எர்ணாகுளத்தில் இருக்கும் புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு சென்றனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த மாணவன் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து வீட்டிற்கு வந்த பெற்றோர் தங்களது மகன் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு கதறி அழுதனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மாணவன் தனது தாயின் உடல்நலம் பற்றி நினைத்து வேதனையில் இருந்துள்ளார். இதனால் தற்கொலை முடிவு எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது .