புதுச்சேரியைச் சேர்ந்தவர் கார்த்திக்(30). இவர் சினிமா வெளிப்புற படப்பிடிப்பு ஊழியராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் கார்த்திக் 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். கடந்த 2022-ஆம் ஆண்டு சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி கார்த்திக் சென்னைக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் தாம்பரத்தில் ஒரு வீடு எடுத்து தங்கி பலமுறை சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கிடையே சிறுமி காணாமல் போனதாக அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் சிறுமி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவரை பத்திரமாக மீட்டனர் . அதன் பிறகு கார்த்திக்கை கைது செய்தனர். இந்த வழக்கு போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி கார்த்திக்கிற்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 4 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.