
மத்திய பிரதேஷ் மாநிலம் சித்தி மாவட்டத்தில் 400 கிலோ வாட் உயர் மின் கோபுரம் ஒன்று அமைந்திருந்தது. அங்கு பழைய கோபுரங்களை மாற்றி விட்டு புதிய கோபுரங்களை அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் திடீரென உயர்மின் கோபுரம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் 3 தொழிலாளிகள் உயிரிழந்த நிலையில் 6 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்த தொழிலாளர்கள் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.