
உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் மனதை பதறவைக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது ரத்தம் வழிந்த நிலையில் இருந்த இளைஞரை, வேகமாக வந்த தார் கார் ஒன்று மோதித் தள்ளி நசுக்க முயன்றது. அதிர்ஷ்டவசமாக அந்த இளைஞர் சாலையின் ஓரத்தில் இருந்த வடிகாலில் குதித்து உயிரைக் காப்பாற்றினார். இந்த திகிலூட்டும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வீடியோவாக வைரலாகி வருகிறது.
नोएडा में एक तेज रफ्तार थार ने लहूलुहान युवक को टक्कर मारकर कुचलने की कोशिश की। वीडियो हुआ वायरल @NavbharatTimes pic.twitter.com/pVZIqN1k6X
— NBT Uttar Pradesh (@UPNBT) June 3, 2025
இந்த சம்பவம் செக்டர் 24 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செக்டர் 53 பகுதியில் நடந்தது. 28 விநாடிகள் நீளமான அந்த வீடியோவில், முகத்தில் ரத்தம், கழுத்தில் காயங்கள் உள்ள இளைஞர் தெரிகிறார். அவரது சட்டை கிழிந்த நிலையில் காணப்படுகிறார். அந்த காரில் வந்தவர்களுடன் முன்னதாக சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு அந்த வாலிபரை காரை ஏற்றி அவர்கள் கொலை செய்ய முயன்றுள்ளனர்.
வீடியோவில் ஒரு நபர் நடந்து செல்வதையும், பின்னால் அதிவேகமாக வந்த கருப்பு தார் காரும் தெளிவாக தெரிகின்றன. அந்த கார் நேராக அந்த இளைஞரை மோதும் போது, அவர் குதித்து தாரின் பானட்டில் விழுகிறார், பின்னர் சாலையின் ஓரத்தில் இருந்த வடிகாலுக்குள் விழுந்து தப்புகிறார். இந்த சம்பவம் நடக்காமல் இருந்திருந்தால், அந்த இளைஞர் காரின் அடியில் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்திருக்கக்கூடும் என்பது தெளிவாக தெரிகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த போலீசார், இதை முக்கியமான ஆதாரமாக எடுத்துக்கொண்டு வழக்குப் பதிவு செய்துள்ளனர். காரில் வந்த குற்றவாளிகளை கைது செய்வதற்காக போலீசார் விரிவான தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம், குறித்த வீடியோ வைரலாகி அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.