
தலைமன்னார் அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படை நளிரவில் கைது செய்தது. அவர்களது இரண்டு விசை படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்துக் கொண்டு இருந்ததாக இலங்கை கடற்படை குற்றம் சாட்டியுள்ளனர். சமீபத்தில் இலங்கை அதிபர் இந்தியா வந்து போன நிலையிலும் மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படவில்லை.
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.