
தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் பருவமழை காரணமாக காய்கறிகளின் விலை கிடைகடுவென உயர்ந்துள்ளது. குறிப்பாக தக்காளி விலை நாளுக்கு நாள் உச்சம் தொட்டு கொண்டிருக்கிறது. எது ஒரு உணவை சமைக்க வேண்டும் என்றாலும் சுவையை அதிகரிக்க பயன்படுத்துவது மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்தை சீராக வைத்திருக்கவும் தக்காளி உதவுகின்றது. ஆனால் இந்த தக்காளியை அதிகமாக வாங்கி வீட்டில் வைத்தால் அவை சீக்கிரம் கெட்டுவிடும். அப்படி தக்காளி சீக்கிரம் கெடாமல் இருப்பதற்கு என்ன செய்வது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தக்காளியை நீண்ட நாட்கள் கெடாமல் வைத்திருக்க அவற்றை நன்கு கழுவ வேண்டும். அதன்பிறகு அனைத்து தக்காளியையும் முறையாக காய வைத்து அதன் பிறகு ஒரு கூடையில் வைத்து ஃப்ரிட்ஜில் வைக்கலாம்.
தக்காளி பிரஸ் ஆக இருக்க குளிர்சாதன பெட்டியில் அதிகம் அழுத்தம் தராத இடத்தில் வைக்க வேண்டும். முதலில் அனைத்து காய்கறிகளையும் போட்டு அதன் பிறகு தக்காளியை வைத்தால் கெட்டுப் போகாமல் இருக்கும்.
தக்காளியை நேரடியாக குளிர்சாதன பெட்டியில் வைக்க கூடாது. அதே ஈரமானால் சீக்கிரம் அழுகிவிடும். முதலில் செய்தித்தாளை ஒரு கூடையில் பரப்ப வேண்டும். அதில் தக்காளியை மேல் வைத்து அதன் மேல் மற்றொரு காகிதத்தை விரித்து வைத்தால் தக்காளி கெடாமல் இருக்கும்.
விலை உயர்ந்த தக்காளியை நீண்ட நேரம் புதியதாக வைத்திருக்க ஆப்பிள் பெட்டியை பயன்படுத்தலாம்.
தக்காளி நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க சந்தையில் அதிக சிவப்பு தக்காளியை வாங்க வேண்டாம். எப்போதும் லேசான கடினமான தக்காளியை பார்த்து வாங்க வேண்டும். அதன் பிறகு அவற்றை ஒரு வலைப்பையில் உலர வைத்து வைத்தால் எளிதில் அழுகாது.