
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ராவில் ஒரு சிறுமி வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அந்த சிறுமிக்கு 5 வயது ஆகும் நிலையில் அந்தப் பகுதி வழியாக சென்ற ஒரு இளைஞர் திடீரென சிறுமியை பிடித்து ஒரு கோவிலுக்குள் இழுத்து சென்றார். அந்த சிறுமி கத்திய தால் அந்த சிறுமியின் வாயைப் பொத்திஅவர் பாலியல் பலாத்காரம் செய்தார். அந்த சிறுமியின் அலறல் சத்தத்தை கேட்டதும் சிறுமியின் பாட்டி ஓடிவந்த நிலையில் அந்த மூதாட்டியை வாலிபர் தள்ளிவிட்டுவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார். பி
ன்னர் அந்த பகுதியில் இருந்தவர்கள் மடக்கி பிடித்து அந்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்த நிலையில் பின்னர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் கடந்த மே 18ஆம் தேதி வெளியான நிலையில் தற்போது வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சிறுமியின் குடும்பத்தினர் புகார் கொடுத்த நிலையில் வன்கொடுமை செய்த பவித்ரா என்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் சிறுமியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் நிலையில் முதலில் தனக்கு மனநலம் சரியில்லை என்பது போல அவர் நடித்துள்ளார்.
ஆனால் மருத்துவ சோதனையில் அவர் நலமுடன் இருப்பதும் அவருக்கு எந்தவிதமான மனநல பிரச்சினைகளும் இல்லை என்பது தெளிவாக தெரிய வந்தது. பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது மருத்துவ கண்காணிப்பில் இருக்கும் நிலையில் கைது செய்யப்பட்ட வாலிபரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.