திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள வக்கணம் பட்டி பகுதியைச் சேர்ந்த ஜெயசுந்தரி (64) என்பவர், சமோசா தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இன்று காலை, வேலைக்குச் செல்லும் முறையில் ஜோலார்பேட்டை ரயில்வே நிலையம் அருகே நின்று கொண்டிருந்த போது, விஷ்ணு (30) என்ற வாலிபர் திடீரென ஓடி வந்து, மூதாட்டியின் உதட்டை கடித்து துப்பி, அத்துமீறிய முறையில் நடந்துகொண்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயசுந்தரி அலறி கூக்குரலிட்டதைக் கேட்ட அக்கம் பக்கத்தினர், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விஷ்ணுவை பிடித்து, தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர், காயமடைந்த மூதாட்டி ஜெயசுந்தரியை பொதுமக்கள் மீட்டு, முதலில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு, பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விஷ்ணு மீது மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது. பொதுமக்கள் தாக்கியதால், அவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதுடன், சிகிச்சைக்கு பின்னர் ஜோலார்பேட்டை காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர்.

மூதாட்டியிடம் வாலிபர் செய்த இந்த அத்துமீறல், ஜோலார்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பையும் பொதுமக்கள் மத்தியில் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.