
சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் வைகுந்தம் பகுதியில் கடந்த மாதம் 30 ஆம் தேதி சூட்கேஸில் ஒரு சிறுமியின் சடலம் இருந்தது. அதை போலீசார் கைப்பற்றி சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது ஒரு காரின் அடையாளம் தெரிந்தது. அந்த காரின் உரிமையாளர் கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்ப்பவர் என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.
ஒடிசா மாநிலம் புவனேஸ்கரை சேர்ந்த அபினேஷ் சாகு(41) என்பவர் அஸ்வின் பட்டில்(37) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் பானத்தூர் பங்கனப்பள்ளி பகுதியில் வங்கி பெங்களூர் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்தனர். இந்த தம்பதியினருக்கு ஐந்து வயதில் ஒரு மகன் உள்ளான். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அபினேஷ் சாகு தனது தந்தை கார்த்திக் சந்திர சாகு நடத்தும் ஆதரவற்றோர் ஆசிரமத்திற்கு சென்று சுமைனா(15) என்ற சிறுமியை வீட்டு வேலைக்காக அழைத்து வந்தனர்.
சிறுமி வெந்நீரில் எடுத்து வந்தபோது கை தவறி அஸ்வின் பட்டில் மீது விழுந்தது. இதனால் கோபம் அடைந்த அவர் பூரிக்கட்டையால் சிறுமியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் சிறுமியை மயங்கி விழுந்தார். அன்றைய தினம் வீட்டிற்கு வந்த அபினேஷ் தனது மனைவியை திட்டி விட்டு சிறுமியை ஓய்வு எடுக்குமாறு கூறியுள்ளார். அதன் பிறகு உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிறுமி உயிர் இழந்தார். இதனால் அதிர்ச்சீடைந்த தம்பதியினர் சிறுமியின் உடலை சூட்கேசில் அடைத்து அதனை சேலத்தில் வீசிவிட்டு ஒடிசாவில் பதுங்கியது தெரியவந்தது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.