
கர்நாடக மாநிலத்தில் உள்ள பாகல்கோட் பகுதியில் ஒரு தனியார் வங்கியில் பணி புரியும் லட்சுமி என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு வயதில் ஒரு பெண் இருக்கும் நிலையில் அந்த குழந்தை உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்காக லட்சுமி தன்னுடைய குழந்தைக்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும் உடல்நலம் சரியாகவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் லட்சுமியிடம் அவரது தோழி ஒருவர் சீமா சாம்பவி என்ற பெண் சாமியாரை அறிமுகப்படுத்தியுள்ளார். இவர்கள் இருவரும் செல்போனில் பேசிய நிலையில் சீமா அந்த பெண்ணிடம் உங்கள் குழந்தைக்கு பேய் பிடித்துள்ளது. அதை சரி செய்ய பல லட்சம் ரூபாய் வரையில் செலவாகும் என்று கூறியுள்ளார்.
இதற்கு லட்சுமி ஒப்புக்கொண்ட நிலையில் சீமா பின்னர் அவரது குழந்தைக்காக வீட்டில் பூஜைகள் செய்துள்ளார். அதாவது குழந்தையின் பெயரில் சீமா தன்னுடைய வீட்டில் பூஜை செய்து அதன் வீடியோவை லட்சுமிக்கு அனுப்பி வைத்து அவரிடம் இருந்து 28 லட்ச ரூபாய் வரையில் ஆன்லைன் மூலமாக பெற்றுக்கொண்டார்.
ஆனாலும் குழந்தைக்கு உடல் நலம் சரி வராததால் லட்சுமி சீமாவை தொடர்பு கொண்ட நிலையில் அவரது செல் போன் சுவிட்ச் ஆப் ஆக இருந்தது. மேலும் இதைத் தொடர்ந்து லட்சுமி தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து உடனடியாக போலீசில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து போலி சாமியாரை வலை வீசி தேடி வருகின்றனர்.