திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் ரமேஷ் (40) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஒரு பள்ளி மாணவியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பில் உவரி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

அந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு நெல்லை மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் தற்போது வழக்கு விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டது.

இந்த வழக்கில் தற்போது நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி குற்றவாளிக்கு 3 வருடங்கள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கில் திறம்பட செயல்பட்ட போலீசாருக்கும் சிறப்பாக வாதிட்ட வழக்கறிஞருக்கும் நீதிமன்றம் பாராட்டுகளை தெரிவித்துள்ளது.

மேலும் நெல்லை மாவட்ட காவல்துறையின் விரைவான செயல்பாடுகளால் இந்த வருடத்தில் மட்டும் இதுவரை 10 போக்சோ குற்றவாளிகளுக்கு தீர்ப்பு விரைவில் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.