தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் காவலர்களின் குழந்தைக்கான கல்வி உதவித் தொகையை உயர்த்தி வழங்க CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். காவலர்கள் குடும்பத்தை சேர்ந்த 100 மாணவர்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.25,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது.

தற்போது 200 மாணவர்களுக்கு ரூ.30,000 ஆக வழங்கப்பட உள்ளது. அதுமட்டுமல்லாமல் 10, 12 ஆம் வகுப்பு தேர்வில் முதல் 10 இடங்களை பெறும் மாணவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையும் ரூ.56.58 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.