
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள சிரௌலி பகுதியில், 25 வயதுடைய குருதேவ் என்ற இளைஞர், தனது திருமணத்தை சுற்றி ஏற்படுத்தப்பட்ட அவமதிப்புகள் மற்றும் கேலிக்குரிய பேச்சுகளால் மன உளைச்சலில் சிக்கி, ஒரு இரு மாடி கட்டிடத்தின் மேலே ஏறி தற்கொலை செய்ய முயற்சி செய்தார். இந்த சம்பவம் மே 25ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. சம்பவ இடத்திற்கு விரைந்த சிரௌலி காவல் துறையினர், சுமார் 5 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அவரை பாதுகாப்பாக கீழே இறக்கினர்.
இந்நிலையில் குருதேவ், ஒரு மாதத்திற்கு முன்பே திருமணம் செய்திருந்தார். ஆனால் அந்த திருமணம் குறித்து அவரது உறவினர்கள், கிராமவாசிகள் என பலரும் கேலியும் விமர்சனமும் செய்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. “அவனுக்கு இப்படிப் பட்ட அழகான பொண்ணு எப்படி கிடைச்சதா?”, “அவளோட போஸ் தான் Miss Universe மாதிரி!” என்ற விமர்சனங்கள் தொடர்ந்து வந்துள்ளன. இது ஆரம்பத்தில் சாதாரணமாக இருந்தாலும், பின்னர் அவரது தன்மையை கேள்விக்கேட்கும் அளவுக்கு மோசமான விமர்சனங்களாக மாறியுள்ளது என போலீசாரும், ஊர்காரரும் தெரிவித்துள்ளனர்.
In UP’s Bareilly, a man being teased “over his beautiful wife” got on to the terrace of the house threatening to kill himself. Bareilly SSP Anurag Arya said the man got married 40 days ago and was being constantly teased by the family and neighbours. He was later rescued with the… pic.twitter.com/T4KrVwY1uV
— Piyush Rai (@Benarasiyaa) May 29, 2025
மே 25 அன்று பிற்பகல் 4.00 மணியளவில் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும், சிரௌலி போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ராம்ரதன் சிங், உதவி ஆய்வாளர் ராம்வீர் சிங் மற்றும் காவலர்கள் சுபம் குமார், மனோஜ் குமார் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தற்கொலைக்கான அபாயம் ஏற்படாத வகையில் தரைமட்டத்தில் மெத்தைகள், கட்டைகள் மற்றும் பாதுகாப்பு வலைகள் போடப்பட்டன. போலீசாரும், பொதுமக்களும் தொடர்ந்து குருதேவுடன் பேசிச் சமாதானப்படுத்த முயன்றனர். முடிவில் சுமார் 5 மணி நேர முயற்சிக்கு பிறகு, குருதேவ் பாதுகாப்பாக கீழே இறக்கப்பட்டார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.