தமிழகத்தில் தேங்காய் மற்றும் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருவது இல்லத்தரசிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் வரத்து குறைவின் காரணமாக இன்று தக்காளி விலை கிலோவுக்கு 110 ரூபாய் அதிகரித்துள்ளது. அதாவது சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் தக்காளி வரத்து குறைந்ததால் தற்போது கோயம்பேடு சந்தைகளில் உள்ள கடைகளில் கிலோ 80 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.

அதே சமயத்தில் வெளி சந்தைகளில் தக்காளி விலையானது கிலோவுக்கு 110 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இது இல்லத்தரசிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் வரத்து குறைவின் காரணமாக தக்காளி விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.