
பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவில் நாளந்தா மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு கடந்த 14ஆம் தேதி பன்டூஷ் என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவரை மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கியால் சுட்ட நிலையில் காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் திடீரென அவருடைய இடது கண்ணை காணவில்லை. அதாவது கடந்த 15 ஆம் தேதி பண்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இதைத்தொடர்ந்து நேற்று அவருடைய உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட இருந்தது. அப்போது அவருடைய இடது கண்ணை காணாததால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அவரின் சடலத்துக்கு அருகே அறுவை சிகிச்சை பிளேடு ஒன்று கிடந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்த நிலையில் மருத்துவமனை ஊழியர்கள் எலி கடித்திருக்கலாம் என்று கூறியுள்ளனர். இது தொடர்பாக அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கூறும் போது உயிரிழந்தவரின் கண்ணை யாராவது வெட்டி எடுத்தனரா அல்லது எலி கடித்துள்ளதா என்பது குறித்து விசாரிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்றார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.