கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் என்ற பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன்(33). இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது நண்பர் டேனியல். சம்பவத்தன்று அய்யப்பனும், டேனியலும் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் கற்காடு பகுதியிலுள்ள ரயில்வே கிராசிங் அருகே சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த பகுதியை சேர்ந்த பிரசாந்த்(26) மற்றும் அர்ஜுன்(23) ஆகிய இருவரும் சேர்ந்து பைக்கில் சென்று கொண்டிருந்த அய்யப்பனை வழிமறித்தனர். பின்னர் ஐயப்பனை தகாத வார்த்தைகளால் பேசிய பிரசாந்த்தும் அர்ஜுனும் கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர்.

மேலும் அய்யப்பன் வைத்திருந்த 1000 ரூபாயை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து அய்யப்பன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் பிரசாத் அர்ஜுன் மீது வழக்குபதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர். பின்பு கைது செய்த இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.