மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரியில் நடந்த ஒரு சோகமான சம்பவம் பலரையும் கலங்க வைத்துள்ளது. திருமணம் முடிந்து சில நாட்கள்தான் ஆன ஷிவானி சர்மா என்ற பெண் தனது கணவர் விகாஸ் ஜோஷியுடன் ரயிலில் பயணித்து வந்தார். இரவு 9 மணி அளவில், ரயில் சிவபுரி ரயில்நிலையத்தை கடந்து சென்று கொண்டிருந்த போது, ஷிவானிக்கு வாந்தி வந்தது. அவர் வாந்தி எடுக்க பெட்டியின் கதவருகே சென்றபோது, தவறி ரயிலில் இருந்து கீழே விழுந்தார்.

அவளைத் தேட விகாஸ் உடனே சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினார். எந்த உதவியும் இல்லாமல், இருட்டில்  ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று தனது மனைவியின் உடலைத் தண்டவாளத்தில் கண்டுபிடித்தார். உடனே தூக்கி தோளில் சுமந்து அரை கிலோமீட்டர் நடந்து வந்தார். ஆனால் அந்த நேரத்தில் யாரும் அவருக்கு உதவவில்லை.

விகாஸ் கூறியதன்படி, ஜிஆர்பி போலீசாரிடம் உதவி கேட்டபோதும், அவர்கள் வீணாக ஆவணங்களில் கையெழுத்து போட சொன்னதாகவும், விதிமுறைகளைப் பற்றி பேசத் தொடங்கியதாகவும் தெரிவித்தார். பல சிரமங்களுக்கு பிறகு ஒரு காரை ஏற்பாடு செய்து தனது மனைவியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அங்கு சென்றபோதுதான் ஷிவானி இறந்துவிட்டதாக மருத்தவர்கள் அறிவித்தனர்.

இந்த சம்பவம் அனைவரையும் பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. கணவனின் முயற்சி பாராட்டதக்கது என்றாலும், தகுந்த  நேரத்தில் உதவியளிக்காத அதிகாரிகள் மீது பொதுமக்கள் கோபம் வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.