கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த ஒரு வாலிபருக்கும், ஒரு இளம் பெண்ணுக்கும் கடந்த 2023 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. அதன் பிறகு கணவன் இயற்கைக்கு மாறான உடலுறவுக்கு அழைத்து தன்னுடைய மனைவிக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

அந்தப் பெண் ஒரு பரதநாட்டிய கலைஞராக இருந்த நிலையில் பரதநாட்டிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் அவருடைய கணவர் தடை விதித்துள்ளார். இதுனால அந்த பெண் தன்னுடைய கணவர், மாமனார் மற்றும் மாமியார் ஆகியோரின் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் அந்த வாலிபர் தன் மீதும் தன் பெற்றோர் மீதும் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அவர் மீதான விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்ட நிலையில் இதனை எதிர்த்து அவரது மனைவி மேல்முறையீடு செய்தார்.

இந்த மனு தொடர்பான விசாரணை நேற்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பெண் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கணவர் இயற்கைக்கு மாறான உடலுறவுக்கு அழைத்ததாகவும் அவரது கையை முறித்து அடித்ததாகவும் எனவே அவர் மீதான வழக்கை ரத்து செய்யக்கூடாது எனவும் வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கணவன் அந்த பெண்ணுக்கு தொல்லை கொடுத்து தாக்கியது உறுதியாகியுள்ளது என்றார். எனவே அவர் மீதான கிரிமினல் வழக்கு ரத்து செய்யப்பட மாட்டாது. எனவே இது தொடர்பான மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும் அந்தப் பெண்ணின் மாமனாரும் மாமியாரும் தவறு செய்யாதவர்கள். எனவே அவர்கள் மீதான வழக்கை மட்டும் ரத்து செய்வதாக நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.