
இந்தூரை சேர்ந்த ஒரு பெண் முகேஷ் என்பவருடன் லிவ்-இன் உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் முகேஷ் இளம்பெண்ணை திருமணம் செய்வதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் முகேஷை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அதன்பிறகு முகேஷ் ஜாமீனில் வெளியே வந்தார். சம்பவம் நடந்த அன்று அந்த பெண் நடுரோட்டில் வைத்து முகேஷை பார்த்துள்ளார். அப்போது கோபத்தில் இளம்பெண் முகேஷை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதனை பார்த்த பொதுமக்கள் அந்த பெண்ணை தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர். ஆனாலும் தொடர்ந்து அந்த பெண் முகேஷை சரமாரியாக தாக்கியுள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்ணிடம் இருந்து முகேஷை மீட்டனர். அப்போது முகேஷ் தனது பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி அடிக்கடி தொலைபேசி அழைப்புகள் மூலம் தொந்தரவு செய்ததாக அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நடுரோட்டில் வைத்து இளம்பெண் வாலிபரை தாக்கிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது.