ஒடிசாவில் பந்த்சாஹி என்ற பழங்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஏராளமான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு சிறார்களுக்கும் – நாய்க்கும் திருமணம் செய்து வைக்கும் பழக்கம் காலம்காலமாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு சிறுவனுக்கும் பெண் நாய்க்கும்,சிறுமிக்கும் ஆண் நாய்க்கும் திருமணம் செய்துவைத்தால் அவர்களுக்கு இருக்கும் தீய சக்திகள் விலகி நாய்க்கு சென்றுவிடும் என நம்புகின்றனர்.

இது போன்ற மூட நம்பிக்கையான செயல்கள் இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் இது குறித்த புகைப்படம் இணையதளத்தில் பரவி வர இதை பார்த்த நெட்டிசன்கள் இப்படியெல்லாமா திருமணம் செய்வார்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.