
பீகார் மாநிலத்தில் உள்ள ரக்ஷித் பூரா பகுதியில் பிங்கி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது பக்கத்து வீட்டில் திருமண விழா நடைபெற்றது. அங்கு திருமண விழா கொண்டாட்டங்கள் நடைபெற்ற நிலையில் சுமார் இரவு 11 மணி அளவில் டிஜே இசை ஒலிக்கப்பட்டது.
சத்தமாக இசை ஒலிக்கப்பட்ட நிலையில் திடீரென பிங்கி மயங்கி விழுந்தார். உடனடியாக அந்த சிறுமியை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் ஒரு மணி நேர தாமதமாக சிகிச்சை வழங்கப்பட்டது என்று கூறப்படுகிறது.
ஆனால் அந்த சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். அந்த சிறுமிக்கு மருத்துவமனை நிர்வாகம் தாமதமாக சிகிச்சை வழங்கியதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனால் மருத்துவமனை நிர்வாகம் முன்பாக குடும்பத்தினரும் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
இதில் சிறுமியின் தந்தை ரிக்ஷா ஓட்டுனராக இருக்கும் நிலையில் அவர் தங்கள் மகளுக்கு ஒரு மணி நேரம் தாமதமாக சிகிச்சை வழங்கியதோடு பின்னர் வேறு ஏதோ கதைக்கட்டி என் மகள் உயிரிழந்து விட்டதாக கூறிவிட்டனர் என வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.