
மேற்கு வங்காளத்தின் திரிணாமுல் என்ற பகுதியில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த பகுதியின் காங்கிரஸ் கட்சி தலைவர் அனுப்பிரதா மண்டல் ஆவார். போல்பூர் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் லிட்டன் ஹல்தர் என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு அனுப்பிரதா மண்டல் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பான ஆடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த ஆடியோவில் காங்கிரஸ் கட்சி தலைவர் அனுப்பிரதா இன்ஸ்பெக்டரிடம் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த மிரட்டல் தொடர்பாக அனுப்பிரதா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதனால் அனுப்பிரதா இன்ஸ்பெக்டரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனால் காங்கிரஸ் கட்சித் தலைவர் மண்டல் மீது ஏற்கனவே கால்நடை கடத்தல் தொடர்பாக பல வழக்குகள் நிலுவையில் இருந்து வந்தது. எனவே இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை, சிபிஐ அதிகாரிகள் அனுப்பிரதாவை கைது செய்து திகார் ஜெயிலில் அடைத்தனர். தற்போது அவர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.