உத்திரபிரதேசம் மாநிலம் சட்டசபையில் மொபைல் போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 66 ஆண்டுகால அரசியல் வரலாறை கொண்டுள்ள உத்திரபிரதேசம் மாநிலம் சட்டசபையில் இந்த நடவடிக்கை முதல் முறை என்று கூறப்படுகிறது. இதனுடன் பேனர்கள் மற்றும் போஸ்டர்களை சட்டசபைக்குள் கொண்டு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இன்று நவம்பர் 28ஆம் தேதி தொடங்கும் குளிர்கால கூட்டத் தொடரில் இருந்து அமலாகும் என்று அறிவிக்கப்பட்டதற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.