பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அமீர்கான். இவர் லால் சிங் தத்தா திரைப்படத்திற்கு பிறகு சினிமாவிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதாவது அந்த திரைப்படம் நன்றாக இருந்தாலும் பலர் அதனை புறக்கணித்ததால் படுதோல்வி ஏற்பட்டது. இதனால் நடிகர் அமீர்கான் இனி சினிமாவிலிருந்து சிறிது காலம் ஓய்வு பெறுவதாக அறிவித்த நிலையில் பின்னர் படங்கள் எதுவும் நடிக்காமல் இருந்தார். சிறிது காலம் ஓய்வில் இருந்து அமீர் கான் மீண்டும் நடிக்க வந்த நிலையில் தற்போது பேட்டி ஒன்றில் இன்னும் 10 வருடங்கள் மட்டும்தான் சினிமாவில் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.

அதாவது லால் சிங் தத்தா திரைப்படத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி விடலாம் என்று எண்ணியதாகவும் ஆனால் தன் குழந்தைகள் வற்புறுத்தியதால்தான் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்ததாகவும் கூறிய அவர் இன்னும் 10 வருடங்கள் மட்டுமே சினிமாவில் நடிப்பேன் என்றார். அதன்பிறகு சினிமாவில் இருந்து விலகி ஓய்வு பெற்று விடுவேன் என்றார். மேலும் அவருடைய இந்த அறிவிப்பு அமீர்கான் ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.