தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் இடையில் நேற்று போக்குவரத்து துறை மற்றும் இயக்கூர்திகள் சட்டங்கள் -நிர்வாக துறை தொடர்பான மானிய கோரிக்கை மீது விவாதம் நடந்தது. அதில் பேசிய அமைச்சர் சிவசங்கர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.  அவ்வகையில் வீட்டிலிருந்து பழகுணர் உரிமம் பெறலாம் என சட்டப்பேரவையில் பொதுத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஆதாரை அடையாளம் ஆவணமாக பயன்படுத்தும் விண்ணப்பதாரர்கள் தங்கள் வீட்டில் இருந்தோ அல்லது விருப்பமான இடத்தில் இருந்தோ பலகுணர் உரிமம் தேர்வினை மேற்கொள்ளலாம். ஆதார் இல்லாதவர்கள் LLrதேர்விற்காக நேரில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.