
சர்க்கரை கலந்த குளிர்பானங்கள் அனைத்து பள்ளி வளாகத்திலும் அனுமதிக்கப்படக் கூடாது என்று உலக சுகாதார மையம் புதிய வழிகாட்டுதல்களை தற்போது வெளியிட்டுள்ளது. இது போன்ற சர்க்கரை கலந்த பானங்கள், பீச் இனிப்புகள் மற்றும் ஐஸ்கிரீம்கள் குழந்தைகளுக்கு உடல் பருமன் மற்றும் பல்வேறு உடல் நலம் சார்ந்த பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக தெரிய வந்துள்ளது.
பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு நலனை கருதி இதனை தடுப்பதற்காக பள்ளி தலைமை ஆசிரியர்கள் உடனே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பள்ளி வளாகங்களில் குளிர்பானங்களுக்கு பதிலாக நல்ல தண்ணீர், மோர், புதினா மற்றும் எலுமிச்சைச்சாறு ஆகியவை இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.