போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக இருக்கும் வகையில் பேருந்து மற்றும் ஆட்டோக்களை நடுவழியில் நிறுத்தி யாரையும் ஏற்றவோ இறக்கவோ கூடாது என்று சென்னை போக்குவரத்து காவல்துறை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. சென்னையில் பேருந்து மற்றும் ஆட்டோ நிறுத்துமிடங்கள் என எண்பது இடங்களை தேர்வு செய்து அவற்றில் மட்டும் பேருந்து மற்றும் ஆட்டோ கலையும் மற்ற வாகன ஓட்டிகளுக்கு இடையூறு இல்லாமல் நிறுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் விதமாக பேருந்து நிறுத்தங்களில் பயணிகளை ஏற்றவோ இறக்கவும் கூடாது. பேருந்து நிறுத்தம் இருக்கும் இடத்தில் சாலைக்கு நடுவே பேருந்து அல்லது ஆட்டோ கலை எக்காரணத்தைக் கொண்டும் நிறுத்தக்கூடாது. பேருந்துகளும் சரியாக பேருந்து நிறுத்தத்திற்கு அருகே நிற்கவும் ஆட்டோக்களுக்கு என வரையறுக்கப்பட்ட இடங்களில் மட்டும் ஆட்டோக்கள் நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து காவல்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.