தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் குடித்ததில் 51 பேர் தற்போது உயிரிழந்துள்ள நிலையில் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க தமிழக அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் மருந்து கடைகளில் சில பொருட்களை வாங்குவதற்கும் தமிழக அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

குறிப்பாக சானிடைசர் வாங்குவதற்கு ஆதார் அட்டை கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆல்கஹால் மற்றும் எத்தனாலை மூலப்பொருளாக கொண்ட சானிடைசர், ஹேண்ட் வாஷ், ஸ்பிரிட் போன்ற பொருட்களை முறைப்படி விற்பனை செய்ய வேண்டும். இதனை தமிழ்நாட்டில் உள்ள 37 ஆயிரம் மருந்து விற்பனை செய்யும் கடைகளுக்கும் மருந்து விற்பனையாளர் சங்கம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் தனி நபர்களுக்கு விதிமுறைகளை மீறி அதிக அளவில் சனிடைசர் விற்பனை செய்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரித்துள்ளது.