தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி மற்றும் கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெயில் காலம் தொடங்கி விட்டதால் பொதுமக்களுக்கு அலைச்சல் இருக்கக் கூடாது என்பதற்காக மக்களை அலைக்கழிக்காமல் ஒரே தவணையில் அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் வழங்க வேண்டும் என்று ரேஷன் ஊழியர்களுக்கும் அதற்கேற்றவாறு கடைகளுக்கு முழு அளவில் பொருட்களை அனுப்ப வேண்டும் என நுகர்ப்பொருள் வாணிபக் கழகத்திற்கும் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது