தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் அரசு சார்பாக வழங்கப்பட்டு வருகிறது.11 ஆம்  வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படுகின்றது.  இந்நிலையில் விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு, விலையில்லா மிதிவண்டிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று வழங்கினார்.

அதன் பின்னர் பேசிய அவர், இனி தமிழகத்தில் வருங்காலங்களில் இலவச மிதிவண்டி 11 மற்றும் 12 மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், அனைத்து வகுப்புகளுக்கும் இலவச மிதிவண்டி வழங்க, நிதிநிலைக்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அமைச்சரின் இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பில் இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் தொடர்ந்து அமலில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.