தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசுப் பேருந்துகளும் இனி கிளாம்பாக்கத்தில் இருந்தே புறப்படும் என்று போக்குவரத்துத் துறைஅமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். தற்போது அங்கிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளும், தனியாரின் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில், ஜனவரி 30ஆம் தேதி முதல், தென் மாவட்டங்களுக்கு செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக செல்லும்  TNSTC பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படும்.