
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு ராமமூர்த்தி நகர் பகுதியில் வசிக்கும் இளம்பெண் கடந்த 11ஆம் தேதி வெளியே சென்று விட்டு வீட்டிற்கு நடந்து வந்தார். அப்போது இளம்பெண்ணை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அவருக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
அந்த வாலிபரின் மோட்டார் சைக்கிள் வாகன பதிவின் பலகையை இளம் பெண் செல்போனில் போட்டோ எடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ராமமூர்த்தி நகரச் சேர்ந்த அருண் என்பவரை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.