
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். இந்த கட்சியின் முதல் மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்தது. விஜயின் அரசியல் கொள்கைகள் பற்றி பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திமுகவை அரசியல் எதிரி என விஜய் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு பதில் அளித்த பிரேமலதா விஜயகாந்த் மாநாட்டில் கூறியது குறித்து அனைத்து கேள்விகளுக்கும் விஜய் தான் பதில் கூற வேண்டும். பிரஸ்மீட் ஏற்பாடு செய்து விஜயிடம் அனைத்து கேள்விகளையும் கேளுங்கள். நாங்கள் கருத்து தான் கூற முடியும் மாநாட்டில் பேசி அனைத்திற்கும் அவர்தான் பதில் கொடுக்க வேண்டும். தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கருத்து என்னவென்றால் இன்றைக்கு அரசியலுக்கு வரும் போது தங்களது எதிரி யார் என்பதை ஒவ்வொருவரும் அடையாளம் கண்டு தான் செயல்படுகின்றனர்.
அந்த வகையில் விஜய்யும் திமுக தான் அரசியல் எதிரி எனக் கூறியுள்ளார். பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். இப்போதுதான் பிள்ளையார் சுழி போட்டுள்ளார். மாநாடு நடத்தி கட்சி பெயரை சொல்லி கொடி ஏற்றியுள்ளார். விஜய் கடந்து வர வேண்டிய பாதைகள் ஏராளம் உள்ளது. வரும் காலங்களில் அவரது செயல்பாடுகள் முன்னெடுத்து செல்லும் நிகழ்வுகளை பொறுத்து வளர்ச்சி இருக்கும் என கூறினார்.